ADDED : ஏப் 11, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
600க்கும் மேற்பட்ட மாடுகள் வரத்து
ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, விற்பனைக்கு கால்நடைகள் கொண்டு வரப்பட்டன.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்தனர். 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று; 23,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை, 22,000 முதல், 75,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேலான விலையில், 50க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில், 90 சதவீத கால்நடைகள் விற்றதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.