ADDED : டிச 03, 2025 07:40 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் மாநகரில், பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக,
40 வழக்குகள், ஹெல்மெட் இல்லாமல் டூவீலரில் சென்றதா, 354, சீட் பெல்ட்
அணியாமல் காரில் சென்றதாக, 13 வழக்குகள் உள்பட, 656 விதிமீறல்
வழக்குகளை பதிவு செய்து, அபராத தொகையாக, 3.48 லட்சம் ரூபாய்
வசூலித்தனர். குடிபோதை வாகன இயக்கம் தொடர்பாக, 15 வாகன ஓட்டிகளின்
டிரைவிங் லைசன்ஸ் தற்காலிகமாக ரத்து செய்ய ஆர்.டி.ஓ.,க்களுக்கு
பரிந்துரைத்தனர். ஐந்து பேரின் டிரைவிங் லைசன்ஸ் ரத்து
செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
