ADDED : அக் 11, 2025 12:49 AM
அ நிறம் | அளவு
காங்கேயம், காங்கேயம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காங்கேயம் வாரச்சந்தை வளாகத்தில் பணம் வைத்து சூதாடிய ஏழு பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் காங்கேயத்தை சேர்ந்த சரவணன், 38, மணிகண்டன், 30, ராஜா, 45, நந்தகுமார், 30, இளவரசன், 20, கோபால், 52, மணிகண்டன், 27, என தெரிந்தது. இவர்களிடம் இருந்து, 19,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
