ADDED : மார் 24, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு எம்.எஸ்.கே நகரில், சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, சூரம்பட்டி போலீசார் சென்றனர். அப்போது சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த, 26 வயது முதல் 49 வயது வரையிலான ஏழு பேரை கைது செய்தனர்.
* ஈரோடு மூலப்பாளையம் ராஜாராணி நகர் பிரிவு அருகே, ஈரோடு மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஈரோடு முதலியார் தோட்டம் மூலப்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த அப்பு பிரசாந்த், 24, என்பவரிடம், 150 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
