ADDED : டிச 11, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
8ம் வகுப்பு மாணவி மாயம்
ஈரோடு, டிச. 11-
ஈரோடு, அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகேசன். இவரின், ௧௩ வயது மகள், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, ௯ம் தேதி மாலை டியூசனுக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. சிறுமியை தேடி சென்றபோது, நாடார்மேடு பஸ் நிறுத்தம் அருகில் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. தந்தை புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

