/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 7 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
/
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 7 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 7 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 7 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
ADDED : ஆக 18, 2024 10:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே உள்ள கீழ் மாவள்ளம் மலை கிராமத்தை சேர்ந்த மகாதேவன்,கனகா ஆகியோரின் மகள் அகல்யா (7). நேற்று மாலை குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் உள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியில் அகல்யா தவறி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் குழந்தையை சடலமாக மீட்டனர்.
சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

