ADDED : மார் 14, 2026 04:54 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், 2027ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. கலெக்டர் கந்தசாமி தலைமையில் சேர்க்கை பதிவு நடந்தது.
இதில், 59 மாணவர்கள் சேர்ந்தனர். புதிதாக சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி வரவேற்-றனர். அரிசியில் 'அ' என்ற எழுத்தை எழுதி, படிப்பை துவக்கி வைத்து கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார். அனைவருக்கும் நோட்டு, புத்தகங்கள், வண்ண பென்சில் வழங்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் மான்விழி உட்பட பலர் பங்கேற்-றனர்.
