ADDED : நவ 03, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், நவ. 3-
தாராபுரத்தை அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவா, 33; உறவினர்களை ஊருக்கு அனுப்ப, குடும்பத்துடன், தாராபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று சென்றார். அப்போது வீட்டில் பிரிட்ஜ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் தகவலின்படி சென்ற, தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். பிரிட்ஜ் மட்டுமின்றி டி.வி., பேன் உள்பட வீட்டில் இருந்த, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து விட்டது. மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது.