/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
/
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : மார் 02, 2026 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை; சென்னிமலை டவுன் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருந்து வருகிறது.
பொதுமக்கள், மாணவ, மாண-வியர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, சென்னிமலை அரசு மருத்துவமனை பகுதியில் அதிக நாய்கள் திரிகின்றன. நோயா-ளிகள், அவ்வழியே செல்வோர், வாகன ஓட்-டிகளை கடிக்க வருகின்றன. இதே நிலை மலை அடிவாரம், அப்பாய் செட்-டியார் தெரு, அரச்சலுார் ரோடு பகுதிகளிலும் தொடர்கிறது. தெருநாய்களுக்கு ஆடுகளை விவ-சாயிகள் பறிகொடுத்து வருகின்றனர். நாய்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

