ADDED : நவ 26, 2025 01:27 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை குறித்த பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் நபார்டு திட்டத்தில் கணபதிபாளையம், டி.ஜி.புதுார், மலையம்பாளையம்
அரசு மேல்நிலை பள்ளிகள், கும்மக்காபாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
