தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு

பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு

பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு


ADDED : மே 18, 2026 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 01:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி:தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்தில், நெல் சாகுபடிக்காக கூடுதலாக தண்ணீர்

திறக்கப்பட்டது.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த, ஏப்.,27 முதல், ஆக.,24 வரை, 120 நாட்களுக்கு, முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்நீரை கொண்டு இரு பாசன விவசாயிகளும், நாற்றாங்கால் அமைத்து, விதை நெல் விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரு வாரத்தில், நடவுப்பணி துவங்க உள்ளனர்.

தடப்பள்ளி வாய்க்காலில் நேற்று முன்தினம், 450 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில், 250 கன அடி திறக்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தடப்பள்ளி வாய்க்காலில், 150 கன அடி தண்ணீர் நேற்று கூடுதலாக திறக்கப்பட்டது. இதனால் தடப்பள்ளி வாய்க்காலில், 600 கன அடி தண்ணீர் வெளியேறியது. அரக்கன்கோட்டை வாய்க்காலில், 250 கன அடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us