/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : ஆக 01, 2024 02:14 AM
ஈரோடு: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து, மாநகராட்சி கூட்-டத்தில் இருந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்-தனர்.
ஈரோடு மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. பல்வேறு கோரிக்-கைகள் குறித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பேசினர். பின்னர், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், ஆன்லைனில் பிளான் அப்ரூவல் என்ற பெயரில் பில்டிங் லைசன்ஸ் வரி-125 சதவீதம் உயர்த்தியதை கண்டித்தும், கூட்டத்தில் இருந்து வெளிந-டப்பு செய்வதாக கூறி வெளியேறினர்.
இதற்கு, 1ம் மண்டல தலைவர் பழனிசாமி, மின் கட்டண உயர்-வுக்கு காரணம் அப்போதைய அ.தி.மு.க., அரசு தான் என பதில் கூறினார். முன்னதாக, கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்-சரிவால் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.