sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 05, 2024 01:49 AM

Google News

ADDED : மார் 05, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததை கண்டித்தும், போதை பொருட்களின் கேந்திரமாக தமிழகம் உள்ளதை கண்டித்தும், தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று, அ.தி.மு.க., பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதன்படி ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் ஈரோடு அ.தி.மு.க, ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணியம், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் முன்னிலை வகித்தனர்.முன்னாள் அமைச்சர்களும் எம்எல்ஏக்களுமான செங்கோட்டையன், கருப்பணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். இதில் தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us