/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.பி.எஸ்., வருகை குறித்து அ.தி.மு.க., ஆலோசனை
/
இ.பி.எஸ்., வருகை குறித்து அ.தி.மு.க., ஆலோசனை
ADDED : அக் 14, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வெள்ளித்திருப்பூர் அருகே நேற்று நடந்தது. செயலாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எல்.ஏ., செல்வராஜ், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
அந்தியூரில் நடக்கவிருக்கும் பரப்புரையில், அதிகளவில் மக்களை அழைத்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ரமணீதரன், ராஜாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.