/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபட் மீது பல்சர் மோதல் அந்தியூர் தொழிலாளி பலி
/
மொபட் மீது பல்சர் மோதல் அந்தியூர் தொழிலாளி பலி
ADDED : நவ 19, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகே சிந்தகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள், 55; கூலி தொழிலாளி. தனது டி.வி.எஸ்., 50 மொபட்டில் பிரம்மதேசத்திலிருந்து அந்தியூர் செல்லும் வழியில் உள்ள பங்க்குக்கு பெட்ரோல் அடிக்க நேற்று மதியம், 3:00 மணிக்கு சென்றார்.
பங்க் அருகே சென்று திரும்பியபோது, பஜாஜ் பல்சரில் வந்த பர்கூர்மலை ராஜ்குமார், 19, மோதினார்.இதில் துாக்கி வீசப்பட்ட பெருமாள் சம்பவ இடத்தில் பலியானார். அதே சமயம் கை, காலில் காயமடைந்த ராஜ்குமார், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

