ADDED : ஆக 12, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, சத்தியமங்கலம் அருகே புதுபீர்கடவு பகுதி, பழத்தோட்டத்தை சேர்ந்த மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: பழத்தோட்டம் பகுதியில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். இங்குள்ல புறம்போக்கில், 30 பேர் வரை பட்டா பெற்றுள்ளோம்.
அதை கிராம பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 30 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கண்டிஷன் பட்டாவாக உள்ளதை மாற்றி, 35 பேருக்கு பட்டா வகை மாற்றம் செய்து வழங்கினால், வீடு கட்ட உதவியாக அமையும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

