sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் நள்ளிரவில் ஏ.டி.எம்., மையத்தில் திருட முயற்சி

/

ஈரோட்டில் நள்ளிரவில் ஏ.டி.எம்., மையத்தில் திருட முயற்சி

ஈரோட்டில் நள்ளிரவில் ஏ.டி.எம்., மையத்தில் திருட முயற்சி

ஈரோட்டில் நள்ளிரவில் ஏ.டி.எம்., மையத்தில் திருட முயற்சி


ADDED : டிச 04, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையத்தில், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, கொல்லம்பாளையம் கரூர் பைபாஸ் சாலை ஆஸ்ரம் பள்ளி அருகே, ஐ.ஓ.பி., வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணியளவில் ஏ.டி.எம்., மையத்தில் மர்ம நபர் நுழைந்துள்ளார். பிறகு ஏ.டி.எம்., இயந்திரத்தை ஸ்குரூ டிரைவர் கொண்டு திறக்க முயன்றுள்ளார். அப்போது அலாரம் அடித்ததால், உடனடியாக அங்கு வங்கி ஊழியர் ஒருவர் வந்துள்ளார். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். அப்போது, மையத்தில் உள்ள ஒயர் கட்டாகி இருந்தது தெரியவந்தது. பின்னர், ஏ.டி.எம்., முன்புற ஷட்டரை மூடி விட்டு வங்கி ஊழியர் சென்று விட்டார்.

நேற்று காலை, 11:00 மணியளவில் வங்கி நிர்வாகத்தினர், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம்., இயந்திரத்தின் பாகங்களை கழற்றி பணத்தை திருட முயற்சித்தது தெரியவந்தது. ஏ.டி.எம்., இயந்திரத்தில், 12 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி பணியாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us