ADDED : டிச 22, 2024 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,: ஈரோடு, ஜின்னா வீதி, பின்புற பகுதியை சேர்ந்தவர் காதர் மொய்தீன், 48; நெய் ஸ்டோர் வைத்துள்ளார். சொந்த பயன்பாட்-டுக்காக காஸ் ஆட்டோ வைத்திருந்தார். கடந்த, 20ம் தேதி இரவு வீட்டருகே ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று நள்ளி-ரவு, 2:30 மணியளவில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி மக்கள் காதர் மொய்தீனிடம் தெரிவித்தனர். அவர் அளித்த புகா-ரின்படி தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று, 30 நிமிடம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். ஆனாலும் ஆட்டோ முற்றிலும் சேதமானது. தீ விபத்துக்கான காரணம் தெரிய-வில்லை. மர்ம நபர்கள் தீ வைத்திருக்கலாம் என சந்தே-கத்தில், ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.