/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது
/
போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது
ADDED : ஜன 27, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பவானி, தேர்முட்டி பகுதியில் ஓட்டலில் தொழிலாளி வேலை செய்பவர் வினோத், 29; சிவகங்கை மாவட்டம் தேவகோட்-டையை சேர்ந்தவர். பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.
தேவகோட்டையில் ஒரு மாதத்துக்கு முன் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்-பான போக்சோ வழக்கு தேவகோட்டையில் பதிவு செய்யப்பட்ட நிலையில், பவானி அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்-டது.இதேபோல் பவானி, கூத்தம்பூண்டி அம்மன் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 24; ஆட்டோ டிரைவரான இவர் ஆறு வயது சிறு-மிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். புகாரின்படி பவானி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆனந்தகுமார் திரு-மணம் ஆனவர்.