/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உலக மண் தினத்தையொட்டி 'மஞ்சப்பை' விழிப்புணர்வு
/
உலக மண் தினத்தையொட்டி 'மஞ்சப்பை' விழிப்புணர்வு
ADDED : டிச 07, 2025 09:25 AM

சேந்தமங்கலம்: உலக மண் தினத்தையொட்டி, சேந்தமங்க-லத்தில் மண்ணின் தன்மை மாறாமல் இருக்க, பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும். அதற்கு பதிலாக மஞ்சப்பைகளை உபயோகப்படுத்த வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமமை, அப்துல் கலாம் நண்பர்கள் குழு-வினர் ஒன்றுகூடி நடத்தினர். சேந்தமங்கலம் தெப்பக்குளம் அருகே உள்ள ரேஷன் கடையில், ரேஷன் பொருட்கள் வாங்க வந்திருந்த
பொதுமக்-களுக்கு, அப்துல் கலாம் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா மஞ்சப்பை வழங்-கினார்.
மேலும், பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்-துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்க-ளுக்கு எடுத்து கூறினார். நிகழ்ச்சியில், ரேஷன் கடை விற்பனையாளர் ஆனந்தன், பெரிய
மாரி-யம்மன் கோவில் தர்மகர்த்தா விஸ்வநாதன், அப்துல் கலாம் நண்பர்கள் குழு நிர்வாகிகள் ராஜா, அன்பழகன், ஜீவா, ராகவன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

