ADDED : மார் 13, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு
ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான
புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பயிற்சி, ஈரோட்டில் நடந்தது.
ஒன்றிய அளவில், 97 தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி
பெற்-றனர்.
வட்டார கல்வி அலுவலர் வேலுசாமி தலைமை வகித்து பயிற்சி
வழங்கினார். முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி, 100 சதவீதம் எழுத்தறிவு
கணக்கெடுப்பு செய்வது, எழுத்தறிவு பெறாதவர்களை கண்டறிந்து எழுத்தறிவு
வழங்குவது குறித்து பயிற்சி தரப்பட்டது. வட்டார வளமைய மேற்பார்வையாளர்
மயில்சாமி, ஒருங்கி-ணைப்பாளர்கள் சுகன்யா, அனிதா, கார்த்திக், மைதிலி
சண்முகரா-ஜலு ஆகியோர் பங்கேற்றனர்.
