ADDED : ஆக 12, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில், போதை கலாசாரத்துக்கு எதிரான மாரத்தான் போட்டி, ஈரோட்டில் நேற்று நடந்தது.
10 கி.மீ., மற்றும் ௫ கி.மீ., என ஆண், பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.

