நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:அந்தியூர், சந்தியபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பூவழகி முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா தலைமை வகித்தார்.
வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் தக்க வைத்தல், பள்ளி மேலாண்மை குழுவின் கடமை, அதன் பணி குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு, பள்ளி வளர்ச்சி, மாணவர் சேர்கைக்கான ஆலோசனை வழங்கப்பட்டது. ஆசிரியர் அப்துல் சுபான் நன்றி கூறினார். இதில், சந்தியபாளையம் சுற்று வட்டாரத்திலுள்ள பெற்றோர், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

