நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஓட்டி, வெள்ளகோவிலில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தொடங்கி, பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது.
இதில் ஆட்டோ, பஸ் டிரைவர்கள், இருசக்கர வாகனம் ஓட்டு-வோருக்கும், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் விபத்தை தவிர்ப்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்-கப்பட்டது. வெள்ளகோவில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்-டப்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சத்தியபிரபா, வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசிமரி, போலீசார் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

