நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் சார்பில், தாராபுரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அமராவதி சிலை அருகே தொடங்கிய பேரணியை, தாராபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜினி துவக்கி வைத்தார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணி முடிவில் தனியார் மண்டபத்தில், மே தின விழா நடந்தது. இதில் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.