ADDED : பிப் 09, 2026 08:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூரை அடுத்த தட்டகரை வனச்சரகம் சார்பில், வன உயிரின சரணாலயத்தில், வன தீத்தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ரேஞ்சர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
தட்டகரையின் முக்கிய வீதிகள் வழியாக நடந்த பேரணியில், விழிப்புணர்வு பதாகை ஏந்தி மக்கள், மாணவ, மாணவியர் மற்றும் வன ஊழியர் கலந்து கொண்டனர். அப்போது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

