/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.45,000 மதிப்பிலான விதைகளுக்கு தடை
/
ரூ.45,000 மதிப்பிலான விதைகளுக்கு தடை
ADDED : அக் 04, 2024 01:07 AM
ரூ.45,000
மதிப்பிலான
விதைகளுக்கு தடை
ஈரோடு, அக். 4-
ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தலைமையில், ஈரோடு, தாராபுரம், பவானி, சத்தியமங்கலம் விதை ஆய்வாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது விதிமீறல் காணப்பட்ட, 45,000 ரூபாய் மதிப்பிலான வீரிய ரக காய்கறி விதைகளை, விற்பனை செய்ய தடை விதித்தனர்.
மேலும் விதை வினியோகஸ்தர்கள், விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்கள் மட்டுமே, விதை வினியோகம் செய்ய வேண்டும். விதை ரகங்கள் பதிவு சான்று பெற்றுள்ளதா, பதிவு சான்று காலாவதி ஆகாமல் உள்ளதால், ஒவ்வொரு விதை குவியலும் முளைப்பு திறன் அறிக்கை பெற வேண்டும் என்பதை உறுதி செய்யவும், ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி
அறிவுறுத்தியுள்ளார்.

