நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யானையால் வாழை சேதம்
டி.என்.பாளையம், அக்.16--
டி.என்.பாளையம் அருகே பெருமுகை, வலையபாளையம், மேட்டுக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன், 58; தனக்கு சொந்தமான, ௫ ஏக்கர் நிலத்தில், வாழை பயிரிட்டுள்ளார். நேற்று அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.