/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பனியன் கம்பெனி பஸ் மோதி தந்தை கண் முன் மகள் பலி
/
பனியன் கம்பெனி பஸ் மோதி தந்தை கண் முன் மகள் பலி
ADDED : பிப் 17, 2025 02:37 AM
பவானி: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த ஓலப்பாளை-யத்தை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் கோபிகா, 25; பொறியியல் பட்டதாரி. கோவையில் ஒரு ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கோவையிலி-ருந்து ஊருக்கு வந்த மகளை, ஈரோட்டிலிருந்து ஸ்கூட்டியில் கண்-ணையன் அழைத்து சென்றார்.சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை கடந்து, பவானி கந்த-சாமி மில் அருகே ஒரு வழிப்பாதையில் திரும்பியபோது, பெருந்-துறையில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பவானி நோக்கி சென்ற பனியன் கம்பெனி பஸ் மோதியது. இதில் கோபிகா சம்பவ இடத்தில் பலியானார். கண்ணையன் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்-றனர்.

