ADDED : ஜூன் 16, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்-ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், அடிப்படை எழுத்தறிவு தேர்வு, 1,234 மையங்களில் நேற்று நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில், 25,351 பேர் தேர்வெழுதினர். இத்தேர்வை, 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படை கல்வி அறிவு பெறாதவர்கள் எழுதினர். தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு எழுத்தறிவு சான்று வழங்கப்படும்.