/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் யூனியன் அலுவலகம் முற்றுகை
/
பவானிசாகர் யூனியன் அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூன் 25, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர், பவானிசாகர் யூனியன் புங்கார் ஊராட்சியில், 200க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிகின்றனர். நான்கு வார சம்பள பாக்கி உள்ளதாக கூறி, நுாற்றுக்கும் மேற்பட்டோர், பவானிசாகர் யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்களில் சம்பள பாக்கி பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றதால், கலைந்து சென்றனர்.