ADDED : ஜூன் 18, 2025 01:11 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி, கோவை மாவட்டம் பில்லுார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையில் திறக்கப்படும் உபரிநீர், பவானிசாகர் அணைக்கு வந்து சேர்கிறது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று, 14 ஆயிரத்து, 567 கன அடி நீர் வரத்தானது. அணை நீர்மட்டம், 86.59 அடியாக இருந்தது. இதே அளவில் நீர்வரத்து தொடர்ந்தால், சில நாட்களில் அணை நீர்மட்டம், ௯௦ அடியை தொடும்.
