ADDED : ஆக 07, 2024 06:51 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய கன மழையால், பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம், 1,326 கன அடியாக இருந்த நீர்வரத்து, 2,949 கன அடியாக நேற்று அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம், 95.13 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 25 டி.எம்.சி.,யாக உள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
