/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் பார் ஊழியர்களை தாக்கி தலைமறைவு; பா.ஜ., நிர்வாகி கைது
/
டாஸ்மாக் பார் ஊழியர்களை தாக்கி தலைமறைவு; பா.ஜ., நிர்வாகி கைது
டாஸ்மாக் பார் ஊழியர்களை தாக்கி தலைமறைவு; பா.ஜ., நிர்வாகி கைது
டாஸ்மாக் பார் ஊழியர்களை தாக்கி தலைமறைவு; பா.ஜ., நிர்வாகி கைது
ADDED : நவ 16, 2025 01:51 AM
காங்கேயம்:காங்கேயம் அருகே மேட்டுப்பாறையில், டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் செயல்படுகிறது. இந்த இடம் திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் விஜயகுமாருக்கு, 48, சொந்தமானது.
திருப்பூரை சேர்ந்த அழகர்சாமி என்பவருக்கு உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வாடகை தொடர்பாக இருவருக்கும் தகராறு இருந்தது. இந்நிலையில் கடந்த, 13ம் தேதி காலை, அடியாட்களுடன் சென்ற விஜயகுமார் உள்ளிட்டோர், பார் ஊழியர்களை கட்டையால் அடித்து தாக்கினர். இதில் நான்கு பேர் காயமடைந்தனர்.
புகாரின்படி வழக்குப்பதிந்த ஊதியூர் போலீசார், பங்காம்பாளையம் சுரேஷ், 25; திருப்பூர் மனோஜ்குமார், 27, ஆகிய இருவரையும் கைது செய்தனர். விஜயகுமார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மைசூருவில் தலைமறைவாக இருந்த விஜயகுமாரை, போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

