நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி, சேர்வராயன்பாளையம் மேம்பாலம் அடியில், கட்டுமான திட்டங்கள் முடிந்த பின்னும், கல் மற்றும் மண் அகற்றப்படாமல் இருந்ததால், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் நீர்வழி தடுப்பு பாலத்தில் அதிர்வு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தால், இதன் மூலம் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இதை கண்டித்து, நேற்று ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, தெற்கு மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.