ADDED : ஜூன் 15, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,: ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, 'உலக ரத்த கொடையாளர் தின' விழிப்புணர்வு பேரணி நேற்று துவங்கியது. கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் தலைமை வகித்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, பெருந்துறை சாலை, மீனாட்சிசுந்தரனார் சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்காவை அடைந்தது. ரத்த தானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகை ஏந்தி சென்றனர். விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.