ADDED : நவ 22, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரத்த பரிசோதனை
நிலையம் திறப்பு
நம்பியூர், நவ. 22--
நம்பியூர் அரசு சமூக சுகாதார நிலையத்தில், புதியதாக கட்டப்பட்ட, ரத்த பரிசோதனை மற்றும் அலுவலக கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியம், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் வீடியோ கான்பரன்சிங்கில் திறந்து வைத்தனர். நம்பியூர் சமூக சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன், பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.