ADDED : ஜன 03, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், ஜன.
3-
திருப்பூர் மாவட்டம் முத்துார் அருகே, நா.கரையூர் பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் ஊர் பொது கிணறு உள்ளது. இதில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்தது. மக்கள் தகவலின்படி வெள்ளகோவில் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார் என்று தெரியவில்லை. மூன்று நாட்களுக்கு முன் கிணற்றில் விழுந்திருக்கலாம்.