ADDED : மார் 14, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
பவானி: பவானி அருகே மயிலம்பாடி கோம்புக்காடு நால்ரோட்டில், பெருமாள் கோவில் அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக, பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஆய்வில் இறந்த நபருக்கு, 65 வயது இருக்கும் என தெரிய வந்தது.
ரோஸ்கலரில் அரைக்கை சட்டை, வெள்ளை, கருப்பு, காக்கி என மூன்று கலர் சேர்ந்த லுங்கி அணிந்திருந்தார். அப்பகுதி மக்களிடம் விசாரிக்-கையில், கடந்த ஐந்து நாட்களாக இதே பகுதியில், வேலை கேட்டு சுற்றியதும் தெரிய வந்தது. உடலை மீட்ட போலீசார், பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
