ADDED : ஏப் 17, 2026 05:21 AM
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 'பூத் சிலிப்' வழங்கும் பணி, கடந்த, 12ம் தேதி முதல் வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: மாவட்ட அளவில், 17 லட்சத்து, 59,157 வாக்காளர்களுக்கும் 'பூத் சிலிப்' அச்சிடப்பட்டு, 12ம் தேதி முதல் வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 15ம் தேதி வரை, ஈரோடு கிழக்கு - 1 லட்சத்து, 1,350, ஈரோடு மேற்கு - 78,433, மொடக்குறிச்சி-63,060, பெருந்துறை-45,815, பவானி-42,642, அந்தியூர்-41,769, கோபி-63,026, பவானிசாகர்-80,851 என, 4 லட்சத்து, 83,940 'பூத் சிலிப்' வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
இது, 27.51 சதவீதமாகும். இன்னும், 12 லட்சத்து, 75,217 வாக்காளர்களுக்கு, 18ம் தேதிக்குள் வழங்கும் வகையில் பணி நடந்து வருகிறது. இவ்வாறு கூறினர்.
தேர்தல் பாதுகாப்பு குறித்து
