/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி
ADDED : அக் 13, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
சூளை பி.பி.கார்டனை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி மணிகண்டன். இவருடைய
மகன் தஷ்வந்த், 6; ஒன்றாம் வகுப்பு மாணவன். வீட்டின் முன்பு தஷ்வந்த்
நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டு இருந்தார். சிறிது நேரம்
கழித்து பெற்றோர் பார்த்தபோது காணவில்லை.
பதறிப்போய் தேடியபோது
வீட்டு முன்புள்ள தண்ணீர் தொட்டிக்குள் கிடந்தான். 8 அடி ஆழ தொட்டியில் 4
அடிக்கு தண்ணீர் இருந்ததால் சிறுவன் மூழ்கி விட்டது தெரிய வந்தது.
உடனடியாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ
பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து
வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.