ADDED : மார் 13, 2026 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த முத்து கவுண்டன் பாளையத்தில், கிளை நுாலகம் கட்டப்பட்டது. இதை மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, நேற்று மாலை திறந்து வைத்தார்.
நிகழ்வில் திருப்பூர் மாவட்ட நுாலக அலுவலர் ராஜன், நுாலக இளநிலை உதவியாளர் சுரேஷ், குண்டடம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செய-லாளர் சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் தாராபுரத்தை அடுத்த சத்திரத்தில், சாலை பணிகளுக்கு, அமைச்சர் சாமிநாதன் தலைமையில் பூஜை நடந்தது.

