ADDED : மே 15, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:: ஈரோட்டில் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், புதிய தொழிலாளர் நான்கு தொகுப்பு சட்டங்களை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு எம்.எஸ். சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகத்தில், அகில இந்திய பி.எஸ்.என்.எல்--டாட் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு தீர்வு காண வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். பெண்கள் பணியாற்றும் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதி வேண்டும். தொழிலாளர் விரோத புதிய தொழிலாளர் 4 தொகுப்பு சட்டங்களை வலியுறுத்தி
கோஷமிட்டனர்.
