/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இட ஒதுக்கீட்டில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு
/
இட ஒதுக்கீட்டில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : அக் 08, 2025 01:16 AM
ஈரோடு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நடப்பு, 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற, தனியார், சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் எல்.கே.ஜி., - 1ம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை நடந்து வருகிறது.
வரும், 17ல் நிறைவு பெறும். எமிஸ் இணைய தளம் மூலம் ஆன்லைனில் சேர்க்கை நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள மெட்ரிக், சுயநிதி, துவக்க மற்றும் மழலையர் பள்ளிகளில் எல்.கே.ஜி., - 1 ம் வகுப்புக்கு தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில், அதே பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை நடக்கும். இத்தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.