மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் தாமரைக்கு ஓட்டு கேட்டு பிரசாரம்
மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் தாமரைக்கு ஓட்டு கேட்டு பிரசாரம்
ADDED : ஏப் 19, 2026 05:35 AM
ஈரோடு : மொடக்குறிச்சி சட்டசபை தொகுதி பா.ஜ., வேட்பாளர் கிருத்திகா, தாமரை சின்னத்தில் ஓட்டு கேட்டு நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட வெள்ளோட்டம்பரப்பு எல்லை, அரிக்காரன்காட்டூர், வெள்ளோட்டம்பரப்பு, பெருமாம்பாளையம், வடுகனுார், மணக்காட்டூர், நடுப்பாளையம், பெரியூர், நத்தகாட்டூர், வேலப்பம்பாளையம், செம்மடை, திட்டுப்பாறை, வெள்ளியம்பாளையம், தேவம்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், அண்ணமார் கோவில், குட்ட
பாளையம், வீரப்பகவுண்டன் காட்டூர், வண்ணாம்பாறை, சின்ன செம்மாண்டாம்பாளையம், மொசுக்கரை, குள்ள கவுண்டன் புதுார், ஆட்டுக்காரன்புதுார் பகுதிகளில் பெண்கள், தொழிலாளர்கள், குடியிருப்புவாசிகளிடம் நேற்று காலை தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின்போது பிரதமர் மோடி அரசின் மக்கள் நல திட்டங்கள், அதிமுக பொது செயலர் இ.பி.எஸ்., அளித்த தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிகாட்டி, வேட்பாளர் கிருத்திகா ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். பல இடங்களில் மக்கள் அவருக்கு
உற்சாக வரவேற்பு அளித்தனர்.
