ADDED : ஏப் 27, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர் : நம்பியூர் அருகே தண்ணீர் பந்தல் தோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் 35; கோவையில் பீளமேட்டில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார்.
நேற்று காலை பணிக்காக காரில் புறப்பட்டார். நம்பியூர், கெட்டிசெவியூர் பிரிவு அருகில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்புச்சுவரில் மோதி, பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. சீட் பெல்ட் அணிருந்ததால் சிறு காயங்களுடன் சக்திவேல் உயிர் தப்பினார். நம்பியூர் போலீசார் சக்திவேலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

