ADDED : அக் 17, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோட்டில் கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை, வேறிடத்துக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நேற்று முன்தினம் மதியம் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கு முறையாக போலீசில் அனுமதி பெறவில்லை. இதனால் அக்கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் தலைமையிலான, 10 பேர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.