/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சீமான், நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு
/
சீமான், நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு
ADDED : பிப் 05, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம், 3ம் தேதி மாலை, 6:00 மணியுடன் ஓய்ந்தது.
நாம் தமிழர் கட்சியினர், ஈரோடு காவிரி சாலை கிருஷ்ணா தியேட்டர் அருகே தெருமுனை கூட்டத்தை, 4:00 மணி முதல் 5:00 மணிக்குள் நடத்தி முடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், 6:00 மணி வரை கூட்டம் நடத்தினர். இதுகுறித்து பறக்கும் படையினர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில் நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.