/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு பதிவு
/
நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு பதிவு
ADDED : மார் 17, 2026 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:நாம் தமிழர் கட்சி சார்பில், அந்தியூர் சட்டமன்ற தொகுதி வேட்-பாளர் அறிமுக கூட்டம், அந்தியூர் தேர்வீதியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த நிலையில், உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடந்துள்-ளது. இதுகுறித்து அந்தியூர் வி.ஏ.ஓ., முருகேசன், அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக, கூட்ட ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, அந்தியூர் வேட்பாளர் ஆனந்தி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

