/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை சென்னிமலை விவசாயிகள் பீதி
/
ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை சென்னிமலை விவசாயிகள் பீதி
ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை சென்னிமலை விவசாயிகள் பீதி
ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை சென்னிமலை விவசாயிகள் பீதி
ADDED : ஆக 27, 2025 03:02 AM
சென்னிமலை:சென்னிமலை அருகே ஆட்டுக்கிடாயை தாக்கி கொன்ற சிறுத்தையால், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை வனப்பகுதியில் அமைந்துள்ள சில்லாங்காட்டுவலசில், ஈரோட்டில் வசிக்கும் வக்கீல் பழனிசாமி தோட்டம் உள்ளது. தோட்டத்தில், 12 வெள்ளாடுகளை கம்பி வேலி அமைத்த பட்டியில் அடைத்து வளர்க்கின்றனர்.
தோட்டத்து தொழிலாளி, நேற்று காலை பட்டிக்கு சென்றபோது ஒரு கிடாயை காணவில்லை. தேடியபோது, கிடாய் தோட்டத்தில், கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. சென்னிமலை வனத்துறையினர் ஆய்வில், ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது தெரிந்தது.
இதே பகுதியில் பாப்பங்காட்டில், விவசாயி அப்புகுட்டி தோட்டத்தில், மே, 16ல் புகுந்த சிறுத்தை, ஒரு வெள்ளாட்டை கொன்றது. இதற்கு முன்னதாக, பிப்., மார்ச்சில் சிலாங்காட்டு வலசு குமாரசாமி தோட்டத்தில், ஆடுகள், கன்று குட்டிகள் தொடர்ந்து காணாமல் போனது. இதற்கு சிறுத்தைதான் காரணம் என, வனத்துறையினர் உறுதி செய்து, அப்பகுதியில் கூண்டு வைத்தனர். ஆனால், சிறுத்தை பிடிபடவில்லை.
இந்நிலையில், மூன்று மாதத்துக்கு பின், சிறுத்தை மீண்டும் வேட்டையை தொடங்கியுள்ளது. வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

